Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
22/04/2025
in மாவட்டங்கள்
0
வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (வயது 75), கேத்தரின்மேரி (வயது 68). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனித்தனியாக அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியில் வசித்து வருகின்றனர்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மற்றும் சப்போட்டா மரங்களை வைத்து பராமரித்துக்கொண்டு தோட்டத்திலேயே வயதான தம்பதிகள் தங்கி உள்ளனர்.

கடந்த 19-ம் தேதி இரவு 8 மணிக்கு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றபோது வேளாங்கண்ணி ஆரோக்கியத்திற்கு பின்கழுத்திலும், அவரது மனைவி கேத்தரின்மேரிக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் அதிர்ச்சியில் இருந்து சுதாரிப்பதற்கு முன்பு கேத்தரின்மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இரு மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

காயமடைந்த முதிய தம்பதிகள் வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து எரியோடு போலீசில் வேளாங்கண்ணி ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கிழக்கு மாரம்பாடி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவரைப் பிடித்து எரியோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது, “தனது நண்பர் பிரபுவுடன் சேர்ந்து மது குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, தாத்தா பாட்டி உறவு முறையில் உறவினர்களான வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தோம்” என்று ஒப்புக்கொண்டார். பிரபுவுக்கு கிடைப்பதில் சரிபாதியாகப் பங்கு தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

எரியோடு போலீசார் அருண்குமார், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட அருண்குமார் மீது எரியோடு போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Crime NewsDindigul Newsgrandson arrestedJewelry theft
Previous Post

புதிய உச்சத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

Next Post

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved