Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
22/04/2025
in மாவட்டங்கள்
0
வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (வயது 75), கேத்தரின்மேரி (வயது 68). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனித்தனியாக அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியில் வசித்து வருகின்றனர்.

தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மற்றும் சப்போட்டா மரங்களை வைத்து பராமரித்துக்கொண்டு தோட்டத்திலேயே வயதான தம்பதிகள் தங்கி உள்ளனர்.

கடந்த 19-ம் தேதி இரவு 8 மணிக்கு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றபோது வேளாங்கண்ணி ஆரோக்கியத்திற்கு பின்கழுத்திலும், அவரது மனைவி கேத்தரின்மேரிக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் அதிர்ச்சியில் இருந்து சுதாரிப்பதற்கு முன்பு கேத்தரின்மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இரு மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

காயமடைந்த முதிய தம்பதிகள் வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து எரியோடு போலீசில் வேளாங்கண்ணி ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கிழக்கு மாரம்பாடி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவரைப் பிடித்து எரியோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது, “தனது நண்பர் பிரபுவுடன் சேர்ந்து மது குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, தாத்தா பாட்டி உறவு முறையில் உறவினர்களான வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தோம்” என்று ஒப்புக்கொண்டார். பிரபுவுக்கு கிடைப்பதில் சரிபாதியாகப் பங்கு தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

எரியோடு போலீசார் அருண்குமார், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட அருண்குமார் மீது எரியோடு போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Crime NewsDindigul Newsgrandson arrestedJewelry theft
Previous Post

புதிய உச்சத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

Next Post

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான் மீட்பு

21/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved