Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/02/2025
in மாவட்டங்கள்
0
விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் சக்திவேல் (42) என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 26ஆம் தேதி விருத்தாசலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களுக்கும், இவரது மனைவி அருணா அருகில் உள்ள ஏனாதிமேடு சிவன் கோவிலுக்கும் சென்றிருந்தனர்.

இரவு 1:50 மணிக்கு சக்திவேல் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதேபோல் அதே தெருவில் வசித்து வரும் சங்கர் மகன் திவாகர் (22), தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது தாய் சுமதி (44), கட்டிட மேஸ்திரி.

இவர்கள் இருவரும் இரவு வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சிவராத்திரி விழாவிற்கு சென்றிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பெட்டியை தூக்கிச் சென்று, அருகிலிருந்த பூங்காவில் வைத்து உடைத்து, அதிலிருந்து 7 பவுன் தங்க நகையும், 90 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதேபோல் அடுத்தடுத்த இருவரது வீடுகளையும் உடைக்க முயற்சித்தபோது, வீட்டிலிருந்தவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Crime News TodayJewells stolenTamil News Today
Previous Post

தமிகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது : ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved