Saturday, March 7, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் வார சந்தை – தொடங்கி வைத்தார் ஆட்சியர் தர்ப்பகராஜ்

Balaji by Balaji
07/03/2026
in மாவட்டங்கள்
0
Organic Farmers Market

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கம் திறப்பு

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., திறந்து வைத்தார்.

Organic Farmers Market
திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கம் திறப்பு

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் பகுதியில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தார்.

AlsoRead

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

இந்த வார சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறுதானியங்கள், தேன், விதைகள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு தரமான முறையிலும் குறைந்த விலையிலும் விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tiruvannamalai Collector,
புதிய கிளை நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் ஆட்சியர்

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி அடி அண்ணாமலை பகுதியில் உள்ள அபய மண்டபம் அருகில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சியர் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் வேங்கிக்கால் பகுதியில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலகக் கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் தனபதி, மாநகராட்சி துணை மேயர் ராஜாரங்கம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட மைய நூலகர் வள்ளி, திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Namakku Naame SchemeOrganic Farmers MarketOrganic Farming Market Tamil NaduTamil Nadu Development NewsTamil Nadu NewstiruvannamalaiTiruvannamalai CollectorTiruvannamalai CorporationVengikkal Market ComplexWater Tank Project Tiruvannamalai
Previous Post

தமிழக ஆளுநர் மாற்றம்: விடைபெறும் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

Next Post

“கருணாநிதியின் ஞானமும், ஜெயலலிதாவின் வேகமும் ஸ்டாலினிடம் உள்ளது” – ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

Related Posts

Coimbatore Rape Case Verdict

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

07/03/2026
Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “இபிஎஸ் மாற்றப்படுவார், பாஜக வேறு ஒருவரை முடிவு செய்துவிட்டது” – மதுரையில் முதல்வர் ஸ்டாலின்
  • “அந்த தொகுதியில்தான்  போட்டி..” – மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்
  • “விசுவாசத்துக்கு ஓபிஎஸ்; துரோகத்துக்கு இபிஎஸ்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • “ஈரான் கப்பல் மூழ்கியது துரதிர்ஷ்டவசமானது; மனிதாபிமான அடிப்படையில் உதவி” – அமைச்சர் ஜெய்சங்கர்
  • “1 ட்ரில்லியன் டாலர்; தமிழ்நாட்டு மகளிரை உயர்த்துவதே அடுத்த 5 ஆண்டு கால இலக்கு” – முதலவர் ஸ்டாலின்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved