Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/04/2025
in மாவட்டங்கள்
0
குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சண்டி பேசுகையில் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ள குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.04 அடி ஆகும். அணையின் முழு கொள்ளளவு 700.00 கன அடியாகும். இன்று (நேற்று) காலை 6  மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.04 அடி.

 மற்றும் அணையின் கொள்ளளவு 700.00 கன அடி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை தேவைக்கான குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 106.92 க.அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையில் மீதம் உள்ள நீர் 593.08 கன.அடி பாசனத்திற்கான தண்ணீர் இருப்பு ஆகும்.

மேலும் குப்பநத்தம் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு இன்று (நேற்று) முதல் நாள் ஒன்றுக்கு 240 கன அடி வீதம் 3.05.2025 அன்று காலை 10.00 மணி வரை 28 நாட்களுக்கு 9432.76 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் ஒரே தவணையாக 580.61 மி.கன.அடி தண்ணீர் திறந்து விடப்படும்.  

எனவே, விவசாயிகள் இப்பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளர்களின்  அறிவுரையின்படி, சிறந்த முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி கூறினார். 

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார், செயற்பொறியாளர் (நீர்;வளத்துறை) அறிவழகன், உதவி செயற்பொறியாளர் (திருவண்ணாமலை) சிவக்குமார், உதவி பொறியாளர் (செங்கம்) ஹரிஹரன், செங்கம் வட்டாட்சியர் மற்றும் அரசு  துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags: Chengam NewsKuppanatham Damtiruvannamalai news
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியரை தவறாக பேசிய மேற்பார்வயைாளர் சஸ்பெண்ட்

Next Post

சினிமாவை வீழ்த்திய பச்சைத்துண்டு : அகங்காரத்திற்கு தீ வைத்த விவசாயிகள்..!

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved