கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பொயனபாடியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆண்டவர் கோவில் உள்ளது. வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இக்கோவில் கோபுரம் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் விரைந்து நேரில் பார்வையிட்டு இதை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும்.
ஆகையால் தமிழக அரசு இந்த கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசுக்கும் அறநிலைத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



