Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு : டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
19/04/2025
in இந்தியா, தமிழ்நாடு
0
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு : டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில் அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தது.

மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். இந்த தீர்ப்பு மாநில அரசிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக மூன்று நாள் டெல்லி சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

இதனிடையே நேற்று குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திதுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியலைமைப்பில் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரிவு 142ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது. அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 145வது பிரிவை எடுத்துரைப்புதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலேசாசனை நடைபெறும் என்றும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை என்ன என்பதும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Tags: Governor R.N. Ravitamilnadu politicsVice President of India
Previous Post

மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகல் : வைகோ அதிர்ச்சி

Next Post

அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து..? கவனிப்பு ஜோரா இருக்கும்போல..??!!

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved