Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/04/2025
in இந்தியா
0
பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

பயங்கரவாதிகளுக்கும், தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இப்போராட்டம் முழு வெற்றி பெற வேண்டும் எனக் கூறியிருந்தன.

இதனையடுத்து மாநிலம் முழுதும் நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வணிகர்கள் சிலர் கூறுகையில்,

‘ நேற்று (நேற்று முன்தினம்) மனதை வலிக்கும் வகையில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மனிதநேயத்திற்கு எதிரான மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக வணிகர்கள் எல்லோரும் உள்ளோம் என்றனர்.

சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், இது மிகப்பெரிய தாக்குதல். சோகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தாக்குதல் நடந்து இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.

ஸ்ரீநகரில் வசிக்கும் ஆஷிக் கூறியதாவது:

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது என்ற செய்தி நல்ல கவலை தரும் செய்தி. இது மனிதநேயத்திற்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என தெரியவில்லை. சுற்றுலா உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது நடந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகம் முழுதும் பெயர் கெட்டு போய் உள்ளது. இது போன்று மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடாது. இது முற்றிலும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: Jammu and Kashmirterror attack
Previous Post

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

Next Post

துணைவேந்தர் மாநாடு மாநில அரசுக்கு எதிரானது அல்ல: ஆளுநர் மாளிகை விளக்கம்

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved