Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
22/04/2025
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று அருணாச்சலேசுவரர் கோயில் ராஜகோபுரம் மற்றும் கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமியையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

AlsoRead

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

திருவணணாமலை மாவட்ட ஆட்சியர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலப் பாதையில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வருகின்றனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டம் வர கூடிய பௌர்ணமியாக சித்ரா பௌர்ணமி உள்ளது.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி மே மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8.48-க்கு தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை இரவு 10.44 மணிக்கு முடிவடைகிறது.

இந்த சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது.

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்புறம் மற்றும் கோவிலின் ஏழாம் பிரகாரமான நான்கு மாட வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சித்ரா பௌர்ணமிக்கு முன்னதாக சிமெண்ட் சாலை பணிகளை ரெட் பிக்ஸ் மூலம் 80 சதவீத பணிகளை பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராஜகோபுரம் அருகிலும் மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் சாலையை ஆக்கிரமித்து பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்து ஏலம்கள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

சித்ரா பௌர்ணமிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் இதய சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

வருகின்ற காலம் கோடை காலம் என்பதால் வரும் பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. சித்ரா பௌர்ணமியில் அன்னதானம் செய்யப்படும் இடங்களை உணவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு தரமாக உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்காமல் இந்த முறை விரைவாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் மூலம் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்க முடியும்.

அருணாச்சலேஸ்வரர் கோயில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பொது தரிசனம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags: Arunachaleswarar TempleChitra PauvarnamiSpecial trains to Tiruvannamalai
Previous Post

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Next Post

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்

Related Posts

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

26/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved