Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/03/2025
in இந்தியா
0
இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ‘ரெசிப்ரோகல்’ என்று அழைக்கப்படும் பதிலுக்குப் பதில் என்ற வரி விதிப்பை கையில் எடுத்துள்ளார். அதாவது, ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி விதிக்கும் என கூறியிருக்கிறார் டிரம்ப். வரியே விதிக்காத நாட்டுக்கு அமெரிக்காவும் வரி விதிக்காது என்பதையும் அவர் கூறியுள்ளார்.

பல நாடுகள் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. சீனா, கனடா ஆகிய நாடுகள் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவின் இறக்குமதிக்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. குறிப்பாக, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி இறக்குமதி வரியை குறைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆனால், தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும், பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் வரிகளை அறிவிக்க வேண்டும் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆர்ஐ) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “தவறான தரவுகளை பயன்படுத்தி இந்தியாவை பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார் டிரம்ப். இதுபோன்ற சூழ்நிலை இருந்தால் இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரும் சமநிலையான முடிவு ஏற்பட சாத்தியம் இல்லை. எனவே, இந்தியா அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருந்தும் விலக வேண்டும். மற்ற நாடுகளைப் போல அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தான் சுட்டிக்காட்டிய பிறகு, அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப்சமீபத்தில் பேசியிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீவஸ்தவா, “இது முற்றிலும் தவறானது. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் டிரம்ப் இவ்வாறு பேசி வருகிறார்.இந்த விஷயத்தில் இந்தியாவின் மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா உண்மையான தரவுகளை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.டிரம்பும் அவரது அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

இதேபோல் இந்தியாவில் விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்ஏற்கக்கூடாது என்றும், அவ்வாறு வேளாண் சந்தையை திறந்துவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா எச்சரித்துள்ளார்.

“இந்தியாவில் விவசாய துறையை நம்பி 70 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் 70 லட்சம் பேர் மட்டுமே விவசாய துறையில் உள்ளனர். ஒரு சில விவசாய பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தாலும்கூட அது ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் பிறகு அவர்கள் மேலும் மேலும் சலுகைகளை கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

பல அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஏற்கனவே குறைவான வரிதான் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்க பாதாமிற்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.பிஸ்தாவுக்கு 10 சதவீத வரி இருக்கிறது. அதேசமயம், இந்தியா விவசாய பொருட்களை அமெரிக்காவுக்கு குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. 5 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாய பொருட்கள், பால் மற்றும் கடல்சார் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இப்போது அவர்களின் விவசாய பொருட்களுக்கு வரி விதித்தாலும் கூட அது இந்தியாவின் ஏற்றுமதியை பெரிய அளவில் பாதிக்காது.

அதேசமயம், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இன்று இந்தியா ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் அமெரிக்க பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டுவிடும்.

பல நாடுகள் டிரம்பின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் நேரத்தில், இந்தியாவும் அதையே செய்ய வேண்டும். குறுகிய கால தீர்வைவிட நீண்டகால பொருளாதார மீள்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும்.
அமெரிக்கா ‘பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம்’ என்ற வரிச்சலுகையை நிராகரித்து, பரஸ்பர வரிகளை விதிக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் மட்டுமே இந்தியாவும் பதில் வரிகளை விதிக்க வேண்டும். ஏனெனில் பரஸ்பர வரிகள் பெரும்பாலான தொழில் துறைகளை பாதிக்காது என்று வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன” என ஸ்ரீவஸ்தவா கூறினார்

Tags: ajay srivastavaDonald TrumpGTRI
Previous Post

தொகுதி மறுவரையறை என்பது பல மாநிலங்களின் பிரச்சினை – முதலமைச்சர்

Next Post

பெரம்பூர் ஸ்டேஷனில் போலீசார் கூண்டோடு மாற்றம் : எஸ்.பி. அதிரடி உத்தரவு

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved