Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
18/04/2025
in இந்தியா
0
அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சுப்ரீம்கோர்ட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின் சுப்ரீம்கோர்ட் அரசு நிர்வாகத்துடன் மோதி வந்ததை செய்திகளாக படித்திருக்கிறோம். இஸ்ரேல், இத்தாலி நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் இப்படி ஒரு சிக்கல் நிலவி வருவதும் உண்மை தான். இப்போது இந்தியாவிலும் மத்திய அரசுக்கும், சுப்ரீம்கோர்ட்டுக்கும் இடையே அதிகார மோதல் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டை ‘சூப்பர் பார்லிமெண்ட்’ என துணை ஜனாதிபதியே கடுமையாக விமர்சித்தது நாடு முழுவதும் இக்கட்டான ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு நிர்வாகத்துடன் சுப்ரீம்கோர்ட் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவே வெளிப்படையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக கவர்னர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு எதிராக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியதையும், அந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியதையும், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழக அரசு அந்த மசோதாக்களை சட்டமாக அரசு இதழில் வெளியிட்டதையும், மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கே நீதிபதிகள் உத்தரவு வழங்கியதையும் மத்திய அரசு ரசிக்கவில்லை.

மாறாக இந்த விஷயங்கள் மத்திய அரசு நிர்வாகத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த புயல் முடிவடைவதற்குள், பார்லிமெண்ட்டின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமான வக்போர்டு திருத்த சட்டத்தில், சுப்ரீம்கோர்ட் பல குறைகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியது, போன்ற சம்பவங்கள் மத்திய அரசை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஜனாதிபதிக்கே உத்தரவு போடும் அளவுக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?. பார்லிமெண்ட்டின் இரு சபைகள், மத்திய அரசு நிர்வாகம், ஜனாதிபதியை விட சுப்ரீம்கோர்ட்டுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என மத்திய அரசு மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், துணை ஜனாதிபதி பேசியது மத்திய அரசின் எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து உள்ளது.

அதேசமயம் ஒரு நீதிபதியின் வீட்டில் பல கோடி ரூபாய் பணம், கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது குறித்தும், அந்த விஷயத்தை ஒரு வாரம் வரை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காதது, குறித்தும், அந்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்ததையும் துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டியது நாடு முழுவதும், சுப்ரீம் கோர்ட் செய்தது சரியா? தவறா? என விவாதங்களை உருவாக்கி உள்ளது.

இதற்கு முன்னர் மத்திய அரசின் உச்ச அதிகாரத்தில் இருந்த யாரும், சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக இப்படி ஒரு கடும் விமர்சனத்தை முன்வைத்ததே இல்லை. இனி வரும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் பல சட்டத்திருத்தங்களை செய்யவும், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும், அதற்கு கடிவாளம் போட்டே ஆக வேண்டும் எனவும் மத்திய அரசு முடிவு செய்து விட்டது என்பதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மிக, மிக துல்லியமாக வெளிப்படுத்தி வருகின்றன.

இதனால் தான் தமிழக கவர்னர் விஷயத்தில் மத்திய அரசு இன்னும் எந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யாமலேயே உள்ளது. இப்போது கூட தமிழக கவர்னர் டெல்லியில் தான் இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும், பிரதமர், ஜனாதிபதியுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை என்ன மாதிரி முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.

சுப்ரீம்கோர்ட் தனக்கு எதிரான நடவடிக்கையில் என்ன முடிவு எடுப்பது என கவர்னர் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறார். இல்லை.. இல்லை… ஆலோசிக்கவும், அதனை எப்படி எதிர்கொள்வது என முடிவு செய்யவும் தான் மத்திய அரசுதான் கவர்னரை டெல்லிக்கு அழைத்துள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு நிதானம் காட்டினாலும், விட்டுக்கொடுக்காது என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அப்படி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால், அதிகார மோதல் வெளிப்படையாக தொடங்கி விட்டது என புரிந்து கொள்ளலாம்.

உள்ளுக்குள் இருக்கும் புகைச்சலை மத்திய அரசு வெளிப்படுத்தத் தொடங்கி விட்டது என்றே புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அதன் வழிகாட்டுதலை பின்பற்றத் தொடங்கி விட்டால், சுப்ரீம் கோர்ட் அதிகாரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திரைமறைவில் உறுதியான வலைபின்னலை தொடங்கி விட்டது என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஆக தெள்ளத்தெளிவாக ஒரு விஷயம் புரிகிறது. மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே அதிகார மோதல் தொடங்கி விட்டது. இந்த சிக்கல் எப்படியெல்லாம் பயணிக்குமோ தெரியவில்லை என மக்கள் மத்தியி்ல் ஒரு வித பதட்டம் உருவாகி விட்டது என்பது உண்மையே.

– மா.பாண்டியராஜ்.

Tags: Govt of India\power struggleSupreme Court of India
Previous Post

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

Next Post

‘கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது’ அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved