Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி : இது கும்பமேளா ஆச்சர்யம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/03/2025
in இந்தியா
0
கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி : இது கும்பமேளா ஆச்சர்யம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பிரயாக் ராஜில் நடந்த கும்பமேளாவில் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

உலகில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த விழா,பிப் 26 அன்று நிறைவு பெற்றுள்ளது.

இதில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதில், நீராடிய முக்கிய பிரபலங்கள், ஒரேநாளில் வைரலான இளம்பெண், திரிவேணிச் சங்கமத்தில் உயிரிழப்பு , தீ விபத்து, திரிவேணிச் சங்கமத்தில் பாக்டீரியா இருப்பதாக ஆய்வு அறிக்கை என பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

அந்தவரிசையில், கும்பமேளாவில் 45 நாட்களில் படகோட்டி குடும்பம் ஒன்று கிட்டதட்ட ரூ. 30 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கும் சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது. ஆமாங்க. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை படகில் அழைத்துச் சென்று ஈட்டிய வருவாய்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சட்டசபையில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அவர் பேசும்போது,

“ நான் ஒரு படகோட்டி குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அந்த படகோட்டியிடம் 130 படகுகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் கும்பமேளா நடந்த 45 நாட்களிலும் அவர் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அப்படியென்றால், 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது.” என கூறினார்.

இந்த சம்பவம் கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமல்ல, துன்புறுத்தல், கடத்தல், கொலை ,கொள்ளை தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்றும், 66 கோடி மக்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மகா கும்பமேளாவில் ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாய் கிடைத்ததாகவும், இதனால் பல தொழில்கள் பயனடைந்ததாகவும் கூறிய அவர்,

ஹோட்டல்களில் ரூ.40,000 கோடி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் ரூ.33,000 கோடி, போக்குவரத்தில் ரூ.1.5 லட்சம் கோடி, மதப் பிரசாதங்கள் மூலம் ரூ.20,000 கோடி, நன்கொடைகள் மூலம் ரூ.660 கோடி, சுங்க வரிகள் மூலம் ரூ.300 கோடி, மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள் மூலம் ரூ.66,000 கோடி என வருவாய் ஈட்டியதாகவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Tags: mahakumbh2025Tamil News Today
Previous Post

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

Next Post

மருத்துவப் படிப்பில் 75ஆயிரம் இடங்கள் அதிகரிக்க இலக்கு : பிரதமர்

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved