திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக எதிரில் 6 மாத காலமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் அவர்கள் இச்சாலையைக் கடந்து தான் வர வேண்டும் என்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அந்தத் தெருவில் தான் வரவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



