நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார்.
தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை தொடர்பாக ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து சாலைகளையும் மேம்பாடு செய்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நெடுஞ்சாலை துறைத் அமைச்சர் அவர்களுக்கும் நன்றி. ஆம்பூர் ரெட்டிதோப்பு மேம்பால பணியை அரசு மேற்கொள்ளுமா? திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாதனூரில் பயணியர் விடுதி கட்டபடுமா? நீர்வளத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அகரம்சேரி மேம்பாலம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் சிறுபாலங்கள் அரசு கட்டித்தருமா?
இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித் ததாவது:-
தற்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த போது நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தான்தேர்தல்பொறுப்பாளராக பணியாற்றினேன். நகர பகுதியில் இருந்து ரெட்டித்தோப்பு பகுதிக்கு ரயில்வே குகைவழிபாதை
வழியாகத் தான் செல்ல வேண்டும்.
மழைகாலங்களில் செல்ல இயலாத நிலை. நான் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அந்த பணிக்கு முக்கியத்துவம் தந்து ஆரம்ப கட்டத்தில் ரூ 5.50 கோடி 3300 சதுர மீட்டர் இடம் கையகபடுத்த முடிவு செய்யப்பட்டது.
பின்னர், அப்பகுதியினரின் கோரிக்கையை தொடர்ந்து நேர்பாதையாக மாற்றி அமைத்து ஒரு முறைக்கு மூன்று முறை கூட்டங்கள் நடத்தபட்டன. இதனால், 2300 சதுர அடி கூடுதலாக இடம் எடுத்து ரூ 6 கோடி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பணிக்காக ரூ 66 கோடி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். இப்போது ஒப்பந்தம் கோரப்பட்டு ஒருவார காலத்தில் முடிவு செய்யபட்டு ரெட்டிதோப்பு மேம்பாலம் கட்டாயம் கட்டித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.



