Monday, September 21, 2026
25 °c
Tiruvannamalai
28 ° Mon
30 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
24/03/2025
in தமிழ்நாடு
0
மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டமுடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே விவாதம் நடந்தது.

”சரபங்கா திட்டத்தில் ஒரு குளத்தில் மட்டும்தான் அதிமுக ஆட்சியில் நீர் நிரப்பி இருந்தனர். திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் தாமிரபரணி ஆறு – கருமேனியாறு திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கு ”தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை நான் நிறுத்தவில்லை. அதற்கான நிலத்தை உங்கள் ஆட்சியில் நீங்கள் கையகப்படுத்தவில்லை. அதனால் தாமதம் ஏற்பட்டது. மேலும் அந்த திட்டத்தின் வழிகாட்டு மதிப்பும் உயர்ந்து விட்டது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ”நான் நிறுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவர் திடீர் திடீரென உண்மையை பேசிவிடுவார். அவர் நிறுத்தவில்லை, அவருக்கு முன்பாக இருந்த அம்மா நிறுத்தி விட்டார்” எனத் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

”தாமிரபரணி கருமேனியாறு திட்டத்தில் மத்திய அரசு நிலத்தின் மதிப்பை அதிகரித்தது. இதனால் நிலத்தை எடுப்பதில் காலதாமதம் ஆனது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேகதாது:

மேகதாது அணை குறித்து அவையில் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், “மேகதாதுவில் அணை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முதலில் டிபிஆர் தயார் செய்ய வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் தற்போது மேகதாதுவில் கட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.

அதேபோல், “வண்டல் மண் தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் பேசியபோது வேட்டியை மடித்து கட்டி கடப்பாரையுடன் தூர்வாரினார் எடப்பாடி பழனிசாமி என பேசினார்.

ஆர்.பி.உதயகுமார் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றிருக்கலாம். அவர் மட்டும்தான் வேட்டியை மடித்து தூக்கி கட்டினாரா? நாங்க என்ன பேன்ட் சர்ட்டா போட்டுள்ளோம்?” என பேசினார் அமைச்சர் துரைமுருகன். அவையில் சிரிப்பலை எழுந்தது.

Tags: DuraimuruganEdapadipalanisamyMekedatu
Previous Post

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு : மத்திய அரசு தாராளம்

Next Post

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved