Wednesday, May 14, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

K.Madhavan, Chief Editor by K.Madhavan, Chief Editor
13/05/2025
in தமிழ்நாடு
0
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை  : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கோவை  :

AlsoRead

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

விஷேச வீடுகளுக்கு ‘மொய் கவர்’ தி.மு.க.,வின் புது பார்முலா

வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்ததும் விசாரணையில் அம்பலமானதாகவும், இந்த குரூர கும்பலால், பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிமுக ஆட்சியின்போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததால், இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட 9 பேரையும் காணொலி மூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்படவர்கள் மற்றும் 48 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களும், லேப்டாப்களும் முக்கிய ஆதாரங்களாக இருந்ததாகவும், எந்தெந்த தேதிகளில் குற்றங்கள் நடந்தது என்பதை நிரூபிக்க, அவர்கள் பதிவு செய்த வீடியோக்கள் முக்கிய தடயமாக இருந்ததாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கின் தீவிரத் தன்மை கருதி, கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் பிணை வழங்காததால், 2019-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

முக்கிய வழக்கின் தீர்ப்பு நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

தீர்ப்பு

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

முக்கிய வழக்கின் தீர்ப்பு என்பதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை பிற்பகல் 12 மணிக்கு அறிவித்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை பிற்பகல் 12 மணிக்கு அறிவித்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ரூ.40,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும்.

Tags: Judge NandhinideviKovai CourtPollaachi Sexual Harassment CasePollachi Sexual Harassment Case Judgement
Previous Post

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

Related Posts

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025
“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

12/05/2025

விஷேச வீடுகளுக்கு ‘மொய் கவர்’ தி.மு.க.,வின் புது பார்முலா

12/05/2025

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

09/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
  • எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?
  • “வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்
  • விஷேச வீடுகளுக்கு ‘மொய் கவர்’ தி.மு.க.,வின் புது பார்முலா
  • “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved