Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கலைஞரின் தமிழ் பற்று தெரியும் ; எம்.ஜி.ஆரின் தமிழ் பற்று தெரியுமா?

கலைஞர் கருணாநிதியின் தமிழ் பற்று குறித்து நாம் அறிந்ததே. ஆனால் எம்ஜிஆரும் தமிழ் மீது அளவற்ற பற்று வைத்திருந்தார்.

K.Madhavan, Chief Editor by K.Madhavan, Chief Editor
09/04/2025
in தமிழ்நாடு
0
கலைஞரின் தமிழ் பற்று தெரியும் ; எம்.ஜி.ஆரின் தமிழ் பற்று தெரியுமா?

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி

0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ் பற்றி, தமிழ் புலமை, அற்புதமான தமிழ் செழுமை பற்றி ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். எம்.ஜி.ஆரும்., தமிழ் மொழியை எந்த அளவு நேசித்தார், தமிழுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளது. அந்த அளவு தமிழ் மீது பற்றுடன் வாழ்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.,

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

அதுகுறித்து இன்று இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்குவோமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும் தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க பெரும் முயற்சி செய்தார்.

1974-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பலர் கேட்டுக் கொண்டனர்.

தமிழ் மீது பற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் பொறுமையாக பதிலளித்தார். ‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும் தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில் தான் பேசுவேன்.

நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில் தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம்.’’ என்றார் புரட்சித் தலைவர். அங்கிருந்த கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிப்பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத்தையே அதற்கான திட்டங்களை தயாரிக்கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதோடு, ஒரு குழுவை அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார்.

அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டது தான் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம். தமிழறிஞர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் அவரது திருவுருவச் சிலையை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.

தனது இறுதிமூச்சு வரை தமிழுக்காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழுக்கு சிறப்பு சேர்த்தார் மக்கள் திலகம். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வத்துடன் ரசித்தார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என்பதையும் ஆதாரபூர்வமான கருத்துக்களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்து விட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது.

பாவாணரின் மறைவுக்குப் பிறகு, அவரது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு பாவாணரின் பெயரை சூட்ட அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இதேபோல், அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணையிட்டதோடு, அதற்கு தானே முன்னுதாரணமாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இதேபோல், மதுரையில் தமிழன்னைக்கு சிலை அமைப்பதில் தொடங்கி, தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அவர் எடுத்த பல முயற்சிகள் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த தமிழ்ப் பற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

-மா.பாண்டியராஜ்.

Tags: Kalignar KarunanidhiM.KarunanidhiMakkal ThilakamMG.RamachandranTamil Devotion
Previous Post

விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி- திருமாவளவன் கருத்து

Next Post

“நான் தான் இனிமேல் பாமக தலைவர்” : அன்புமணியின் பதவியை பறித்த நிறுவனர் ராமதாஸ்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved