Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை தை மாதம் பௌர்ணமி.

இந்நிலையில நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அப்போது அருணாச்சலேஸ்வரர் கோவிலின்  இணை ஆணையர் ஜோதி, கோவிலின் தலைமை குருக்களை ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள யாகசாலை அருகில் ஒன்று சேர்ந்தனர். இதனால் அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த, இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அறங்காவல் குழுவினர் சிவாச்சாரியார்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னரல் கொடிமரம் அருகில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு சிவாச்சாரியார்களை அழைத்து சென்று சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த யாரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் அவரவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

முன்னதாக காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர்களிடம் பேசுகையில், தலைமை குருக்கள் ஒருவரை பார்த்து இடைத்தலைவராக செயல்படுகிறார்களா என கேட்கிறார்கள் நான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கி கொடுத்துள்ளேன்.

அப்படிப்பட்ட நபர்கள் வரும்போது கோவிலுக்கு அழைத்து வரும் நிலை ஏற்படும். கோவிலில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் ஆட்களை அழைத்து வருகிறார்கள். அதற்கு ஏதாவது இந்த அறநிலையத்துறை நிர்வாகம் கணக்கு வைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தலைமை குருக்கள் ஆகிய தனக்கே இந்த நிலைமை என்றால் மற்ற குருக்கள்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்கள். சிவாச்சாரியார்களோடு இந்து அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அறங்காவலர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விரைவாக சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Arunachaleswarar Templearunai thamizhTamil News Todayதிருவண்ணாமலை
Previous Post

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

Next Post

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved