திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று 3, 300 பயனாளிகளுக்கு ரூ. 30 கோடி மதிப்பிட்டில் நலத்திட்டங்களை வழங்கினார்.
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், சிறந்த
கூட்டுறவு மையத்திற்கும் கேடயம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-
சிறுதுளி தான் ஏரியிலும் ஆறாகவும், அணைகளிலும் ஓடி மக்கள் பயன்பாட்டிற்கு பெருவெள்ளமாக வருகிறது. அந்த வகையில் தான் கூட்டுறவு சங்கங்கள்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940-ம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்முதன் முதலாக திருவூர் என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.
இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழகம் தான் தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் தொடங்க உந்து சக்தியாக இருந்தவர் வ உ சி அவர்கள் தான். அவர்தான் முதன்முதலாக அயல்நாட்டுடன் போட்டி போட்டுக்கொண்டு கூட்டுறவு சங்கங்களை உருவாக்கியதன் மூலமாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன.
மேலும் மாநிலத்தில் நுகர்பொருள் வாணிக் கிடங்கு என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதுதான், மத்திய அரசிடம் இருந்து பொருட்களையெல்லாம் வாங்கி, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பும், தற்போது, 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ளன என்றால், 32,000 க்கு மேல் ரேஷன் கடைகள் இருக்கின்றன என்றால் அவற்றிற்கு, ரேஷன் பொருட்களை
அனுப்புவது நுகர்பொருள் வாணிபக்கிடங்கு தான்.
நுகர்பொருள் வாதமிழகத்தில் தைர் பொருள் உருவாக்கியவர், கலைஞர். அவரது ஆட்சியில் தான் நுகர்பொருள் வாணிபக் கழகம் வந்தது. கூட்டுறவு சங்கம், கூட்டுறவு மைய வங்கி உள்ளிட்ட கூட்டுறவுத் துறைக்கு தாயாக இருந்தவர், கழக ஆட்சியில் கலைஞர். கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தாயாக இருப்பவர் தளபதி தான். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை. சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



