“‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் கிடைக்கும். அந்தப் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை கொண்டு வர முதல்வர் முழு முனைப்புடன், அனைத்து விவரங்களையும் தயார்படுத்தி வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, “மாணவர்களின் போராட்டத்தை ‘ஜனநாயகன்’ படம் மழுங்கடித்துவிட்டதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “‘ஜனநாயகன்’ படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் வரும். அது மாணவர்களையோ அல்லது வேறு யாருடைய மூளையையோ சலவை செய்யும் படம் அல்ல. வார்த்தைகளின் மூலம் செல்லும் பாதையின் திசையை மாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கிறேன்” என்றார்.



