Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம், பழைய நீதிமன்ற வளாகத்தையொட்டி கிளைச் சிறைச்சாலை கடந்த 1894 ஆண்டு கட்டப்பட்டது. இதில் 29 விசாரணை கைதிகள் மட்டுமே அடைக்கக் கூடிய வசதி உள்ளது.

AlsoRead

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஆரம்பத்தில் நேரு வீதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் இருந்ததால், நீதிமன்றத்தில் சிறையில் அடைக்க வேண்டிய விசாரணை கைதிகள், அருகிலுள்ள கிளைச் சிறையில் அடைப்பதற்கு போலீசாருக்கு சிரமம் இல்லாமல் இருந்தது. இங்கிருந்த நீதிமன்றங்கள் அனைத்தும் கடந்த 2017 ஆண்டு மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டையில் புதியதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஜக்காம்பேட்டையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், ரூ.3.39 கோடி செலவில் புதியதாக கிளைச் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. கைதிகள் எளிதில் தப்பிச் செல்லாதவாறு, சிறையை சுற்றி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன் மேல் 5 அடி உயரத்திற்கு இரும்பு ரோல் அமைக்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் 200 விசாரணை கைதிகள் அடைக்கும் வகையிலும், பிரச்சினைக்குறிய கைதிகளை சிறை வைக்கும் வகையில் தனியாக 50 பேர் தங்க வைக்கும் அளவில் செல் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஓராண்டிற்கும் மேலாகியும் கிளைச் சிறைச்சாலை திறக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகளை கொண்டு செல்வதில் பாதுகாப்பற்ற நிலை ஒருபுறமும், விழுப்புரத்தில் உள்ள வேடம்பட்டு சிறைச்சாலைக்கு குற்றவாளிகளை கொண்டு செல்லும் தேவையற்ற வழிக்காவல் செலவும் அரசுக்கு வீணாகிறது.

திண்டிவனம் காவல் உட்கோட்டத்தில் போலீசார் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வேடம்பட்டு சிறைச்சாலைக்கு கைதிகளை கொண்டு செல்லும் வழி காவல் பணிக்கு போலீசார் பயன்படுத்தப்படும் நிலையால் பணிகள் முடிவடைந்த திண்டிவனம் கிளைச் சிறையை விரைந்து திறக்கப்பட வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிளை சிறைகோரிக்கைசமூக ஆர்வலர்கள்திறப்பு விழாபொதுமக்கள்மயிலம்
Previous Post

பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்

Next Post

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

Related Posts

Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026
Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved