Wednesday, July 29, 2026
22 °c
Columbus
21 ° Thu
24 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

admin by admin
29/07/2026
in தமிழ்நாடு
0
சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், யூடியூபரும் சினிமா விமர்சகருமான பிஸ்மி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், மேலும் தமிழன் கோகுல் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு சீமான் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கௌரி விசாரித்தார். விசாரணையின்போது, தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது என்றும், சீமான் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக ஒரு திமுக எம்எல்ஏ மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படும் நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

AlsoRead

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

இதையடுத்து, “அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது” என்று எச்சரித்த நீதிபதி, மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் சீமான் தொடர்பான மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணையை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: அவதூறு புகார்கள்உயர் நீதிமன்றம் எச்சரிக்கைசீமான்
Previous Post

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

Related Posts

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026
டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

29/07/2026

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

29/07/2026

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

29/07/2026

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
  • கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்
  • டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
  • கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved