Thursday, August 6, 2026
30 °c
Tiruvannamalai
29 ° Fri
31 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

admin by admin
06/08/2026
in ஆன்மீகம்
0
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழா கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆடி அஸ்வினி விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று ஆடி பரணி விழா நடைபெற்ற நிலையில், இன்று முக்கிய நிகழ்வான ஆடிக் கிருத்திகை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

AlsoRead

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், சுவாமிக்கு தங்கக் கவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தந்து வழிபட்டனர்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளத்தில் புனித நீராடி, பால், பன்னீர், மலர், மயில், அலகு உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்து “அரோகரா” முழக்கத்துடன் மலையேறி முருகப்பெருமானை தரிசித்தனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்று நாள் தெப்பத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது. மலைக்கோயில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதிகளில் உலா வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

திருவிழாவையொட்டி திருத்தணி நகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் 3 மின்சார ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்ததால், ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Tags: ஆடிக் கிருத்திகைதிருத்தணிமுருகன்
Previous Post

காவிரி, மேகேதாட்டு விவகாரம் குறித்து முதல்வர் முடிந்தால் பதில் சொல்லட்டும்

Next Post

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்

Related Posts

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

30/03/2026
Thiruayippadi Balukandeeswarar Temple

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

03/03/2026

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

26/01/2026

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

25/01/2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

09/12/2025

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

06/12/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை
  • குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு
  • திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?
  • பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்
  • திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved