Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சமுதாய தலைவர்களின் கடமை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in தலையங்கம்
0
தலையங்கம்

தலையங்கம்

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வட தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் குறிப்பிட்ட இரு சமுதாயத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி பல்வேறு கலவர சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது. சமூக வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியின் மூலம் சாதிய பாகுபாடுகள் குறைந்த நிலையில் அது மீண்டும், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவது தான் கவலை அளிப்பதாக இருக்கிறது. 

AlsoRead

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு சொல்லும் செய்தி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் தனிப்பட்ட சிலரால் நடைபெற்ற விரும்பத்தகாத சில செயல்களாலும் அதை தொடர்ந்து சமுதாய தலைவர்கள் கலந்து கொண்ட பொதுவெளி நிகழ்ச்சிகளின் பேச்சுக்களும் இரு சமுதாயத்தினர் இடையே மீண்டும் மோதலை அதிகப்படுத்தி இருக்கிறது.

ஆம் தனிப்பட்ட சிலர் செய்த தவறுகளால் இரண்டு சமுதாயத்தினர் முட்டி மோதிக் கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒரு கண்டன கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் வன்னியர் சங்க தலைவரை கொலை செய்து விடுவதாக பொதுவெளியில் பேச போக அந்த வீடியோ வைரல் ஆகி வன்னியர் சங்கத்தினரும் அதோடு இணைந்து பாமகவினரும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரண்டு தரப்பிலும் மாறி மாறி வழக்குகள் பதிவாகி கடலூர் மாவட்டமே பதட்டமாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி சமுதாய ரீதியாக பலரும் அணுகி வருவதால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளரிடம் பேசி உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இரண்டு சமுதாய தரப்பு தலைவர்களும் அமர்ந்து பேசி இரு சமுதாயத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை முடித்து வைப்பது அவசியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆம் வேல்முருகன் கருத்தை இரண்டு சமூக தலைவர்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில் இரண்டு சமுதாய தரப்பிலும் மாவட்டம் முழுவதும் மாறி மாறி வழக்குகள் பதிவாகி வரும் நிலையில் அந்த வழக்குகளில் படித்து முடித்து வேலைக்கு செல்ல தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்குகளால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அந்த குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதுதான் அந்த மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களில் வழக்கு மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதிலிருந்து இன்னமும் மீண்டு வர முடியாமல் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர் இரண்டு தரப்பு சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து அந்தந்த சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் அவர்களின் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்து மாநிலத்தில் அமைதி நிலவ செய்வது அவர்களின் முக்கிய கடமை இனியும் காலம் கடத்தாமல் இரு சமுதாய தலைவர்களும் கூடி பேசி இந்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை அமைதியாகவும் ஒற்றுமை உணர்வுடன் அமைய பணியாற்றிட வேண்டியது அவசியம்.

Tags: தலையங்கம்
Previous Post

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

Next Post

தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

Related Posts

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

13/11/2024
தலையங்கம்

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

08/11/2024

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு சொல்லும் செய்தி!

06/11/2024

காற்றில் பறக்கும் மேடை நாகரீகம்!

05/11/2024

வீட்டு பெண் பணியாளர்கள்: தனி கவனம் செலுத்துமா அரசு?

04/11/2024

சமரசமில்லா அரசியல் பயணம் வேண்டும்!

26/10/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved