வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது.
முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது அரசு வழிக்காடுதல் படி போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே மாடுகள் மஞ்சுவிரட்டில் அனுமதித்தனர்.
ஒரு எருது ஒரு சுற்று விடப்படும் அதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இதில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், 2-வது பரிசாக 80 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசு 60 ரூபா என மொத்தம் 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எருது விடும் திருவிழாவில் வேலூர், ஆம்பூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.