Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/03/2025
in தமிழ்நாடு
0
சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டும்… பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கூறும் இரண்டு கோஷ்டிகளிடம் சிக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தவிக்கிறார் என புகழேந்தி தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூரூ புகழேந்தி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இப்போது ஆறு மாதம் கழித்து திடீரென கூட்டணி பற்றிப் பேசலாம் என்று கூறுகிறார். அண்ணாமலை, திடீரென அண்ணன் எடப்பாடி என்கிறார். நேற்று வரை பச்சை துரோகி என்றும், இன்று அண்ணா என்றும் அண்ணாமலை கூறுகிறார். அரசியல்வாதிகளுக்கு தன்மானம் வேண்டும், சுயமரியாதை வேண்டும்.

தைரியம் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய இரண்டு பேரும் எங்கள் தலைவர் பழனிசாமி சொல்லி விட்டார், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று தில்லாக கூறட்டும் பார்க்கலாம். அந்தப் பக்கம் வேலுமணி, தங்கமணி இந்தப் பக்கம் சி.வி.சண்முகம், செல்லூர்ராஜூ, ஜெயக்குமார் என இரு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு பழனிசாமி தவித்து வருகிறார். அதனால் தான் கூட்டணி பற்றி முடிவெடுக்க ஆறு மாதம் கால அவகாசம் கேட்கிறார்.

2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது கொள்கை ரீதியான தகராறாகும். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எந்த காலக்கட்டத்திலும் பிஜேபியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அவருக்குப் பின் வந்த இவர்கள்தான் தங்கள் வசதிக்கேற்ப அதை மாற்றிக்கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிசாமியால் வாங்க முடியாது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்கள் யார்? என்கிற விசாரணை மிகவும் தாமதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும். அவரிடம் விசாரிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Tags: Edappadi PalaniswamiPugazhendi
Previous Post

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

Next Post

தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved