Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/03/2025
in தமிழ்நாடு
0
சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டும்… பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கூறும் இரண்டு கோஷ்டிகளிடம் சிக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தவிக்கிறார் என புகழேந்தி தெரிவித்தார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூரூ புகழேந்தி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இப்போது ஆறு மாதம் கழித்து திடீரென கூட்டணி பற்றிப் பேசலாம் என்று கூறுகிறார். அண்ணாமலை, திடீரென அண்ணன் எடப்பாடி என்கிறார். நேற்று வரை பச்சை துரோகி என்றும், இன்று அண்ணா என்றும் அண்ணாமலை கூறுகிறார். அரசியல்வாதிகளுக்கு தன்மானம் வேண்டும், சுயமரியாதை வேண்டும்.

தைரியம் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய இரண்டு பேரும் எங்கள் தலைவர் பழனிசாமி சொல்லி விட்டார், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று தில்லாக கூறட்டும் பார்க்கலாம். அந்தப் பக்கம் வேலுமணி, தங்கமணி இந்தப் பக்கம் சி.வி.சண்முகம், செல்லூர்ராஜூ, ஜெயக்குமார் என இரு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு பழனிசாமி தவித்து வருகிறார். அதனால் தான் கூட்டணி பற்றி முடிவெடுக்க ஆறு மாதம் கால அவகாசம் கேட்கிறார்.

2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது கொள்கை ரீதியான தகராறாகும். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எந்த காலக்கட்டத்திலும் பிஜேபியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவருக்குப் பின் வந்த இவர்கள்தான் தங்கள் வசதிக்கேற்ப அதை மாற்றிக்கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிசாமியால் வாங்க முடியாது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்கள் யார்? என்கிற விசாரணை மிகவும் தாமதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும். அவரிடம் விசாரிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Tags: Edappadi PalaniswamiPugazhendi
Previous Post

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

Next Post

தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved