Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/03/2025
in தமிழ்நாடு
0
ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில், சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திண்டுக்கல் – குமுளி நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு வழியே நான்கு வழிச்சாலைக்காக சுங்கச்சாவடி அமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை எனத் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தற்போது வரை இரண்டு வழிச்சாலை மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி ஒன்றை அமைத்து, அது மார்ச் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை எனத் தெரிவித்து விட்டு, இருவழிச்சாலைகளின் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதால், சுங்கச்சாவடியை திறக்கக் கூடாது என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையும் மீறி சுங்கச்சாவடி திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அங்கு 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டு, அவசர அவசரமாக நேற்று காலை 8 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. அதனை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கவுன்ட்டர்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் என ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினரும் சம்பவம் இடத்தில் குவிந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய நபர்கள் யார் என்பது குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் திறக்கப்பட்ட சுங்கசாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், திண்டுக்கல் – வத்தலக்குண்டு சாலையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தது. ஆனால், அவசர அவசரமாக நேற்று சுங்கச்சாவடி திறக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் அதனையும் அடித்து நொறுக்கினர்.

அதாவது முதல் முறையும் திறக்கப்பட்ட அன்றே அடித்து நொறுக்கினர். இரண்டாவது முறையும் திறக்கப்பட்ட அன்றே அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரு் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Dindigul Newstollgate smashed
Previous Post

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

Next Post

சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved