Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/03/2025
in மாவட்டங்கள்
0
காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள ஜாப்ராபேட்டையில் மத்திய அரசின் அஞ்சல் துறையின் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.

இதில் லத்தேரி அன்னகுடி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி என்ற பெண் கிளை அஞ்சலகராகப் பணியாற்றுகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.

அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அனைத்து பாஸ்புக்குகளும் தன்னிடமே இருக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து பணங்களை வாங்கிக்கொண்டு வெள்ளை பேப்பரில் பெயர்களை எழுதிக்கொண்டு அவர் அனுப்பிவிடுவார். இதில் ஒரு இளைஞர் சுமார் ரூ.2.50 லட்சம் அஞ்சலக சேமிப்பில் சேமித்துள்ளார்.

பின்பு தனக்கு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதால் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சுடர் நிதி அதற்கு பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வேலூரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இதுகுறித்து தகவலை தெரிவித்துள்ளார். அங்கு அவருடைய கணக்கை பரிசோதனை செய்து பார்த்தபோது முதலில் கணக்கு துவங்கிய ரூ.500-க்கு பிறகு வேறு எதுவும் வரவு வைக்கப்படவில்லை என கூறினர்.

இதனைக் கேட்ட இளைஞர் அதிர்ச்சியடைந்து அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்டபோது, அவர் எதுவும் தகவலை தெரிவிக்காமல் அஞ்சலகத்தைப் பூட்டிவிட்டு ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் தங்களுடைய கணக்கையும் பார்த்தபோது பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கிளை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

சுடர் நிதி குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு தலைமறைவானார். தற்போது பொதுமக்களிடம் சுமார் ரூ.25 லட்சத்திற்கும் மேலாக அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லத்தேரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கடந்த ஐந்தாண்டுகளாக மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சேமிப்பு கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.

Tags: KatpadiPost Office FraudVellore News
Previous Post

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் 

Next Post

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved