Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/03/2025
in மாவட்டங்கள்
0
காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள ஜாப்ராபேட்டையில் மத்திய அரசின் அஞ்சல் துறையின் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.

இதில் லத்தேரி அன்னகுடி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி என்ற பெண் கிளை அஞ்சலகராகப் பணியாற்றுகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அனைத்து பாஸ்புக்குகளும் தன்னிடமே இருக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து பணங்களை வாங்கிக்கொண்டு வெள்ளை பேப்பரில் பெயர்களை எழுதிக்கொண்டு அவர் அனுப்பிவிடுவார். இதில் ஒரு இளைஞர் சுமார் ரூ.2.50 லட்சம் அஞ்சலக சேமிப்பில் சேமித்துள்ளார்.

பின்பு தனக்கு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதால் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சுடர் நிதி அதற்கு பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வேலூரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இதுகுறித்து தகவலை தெரிவித்துள்ளார். அங்கு அவருடைய கணக்கை பரிசோதனை செய்து பார்த்தபோது முதலில் கணக்கு துவங்கிய ரூ.500-க்கு பிறகு வேறு எதுவும் வரவு வைக்கப்படவில்லை என கூறினர்.

இதனைக் கேட்ட இளைஞர் அதிர்ச்சியடைந்து அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்டபோது, அவர் எதுவும் தகவலை தெரிவிக்காமல் அஞ்சலகத்தைப் பூட்டிவிட்டு ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் தங்களுடைய கணக்கையும் பார்த்தபோது பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கிளை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சுடர் நிதி குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு தலைமறைவானார். தற்போது பொதுமக்களிடம் சுமார் ரூ.25 லட்சத்திற்கும் மேலாக அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லத்தேரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கடந்த ஐந்தாண்டுகளாக மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சேமிப்பு கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.

Tags: KatpadiPost Office FraudVellore News
Previous Post

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் 

Next Post

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved