Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் அருகே கோர விபத்து: பெண்கள் உட்பட மூவர் பலி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
21/04/2025
in மாவட்டங்கள்
0
கடலூர் அருகே கோர விபத்து: பெண்கள் உட்பட மூவர் பலி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள மலைக்கிராமமான எம்.புதூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நேரு (57), அரிசி பெரியாங்குப்பம் பகுதி அதிமுக ஊராட்சி செயலாளராகவும் இருந்து வந்தார். ராமாபுரம் கிராமத்தில் அவருக்குச் சொந்தமான முந்திரி தோப்பில் கொட்டை பொறுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிக்கு விவசாயப் பெண் தொழிலாளர்களை அழைப்பதற்காக, அருகிலுள்ள நாயக்கநத்தம் காலனிக்கு நேற்று காலை சென்றார். அங்கிருந்து காலை 7 மணியளவில் விவசாயப் பெண் தொழிலாளர்களான பிரசாந்த் மனைவி சரண்யா (24), பாலாஜி மனைவி கல்பனா (23) ஆகிய இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலையைக் கடந்து ராமாபுரம் பழைய சாலையை நோக்கி திரும்ப முயன்றார்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார், இரு சக்கர வாகனம் மற்றும் அதில் இருந்த மூவரையும் சிறிது தூரம் இழுத்துச் சென்றது.

இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சரண்யாவும், கல்பனாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நேரு, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரும், அதிலிருந்தவர்களும் பின்னால் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

பதைபதைக்க வைத்த இந்த விபத்து மலைக்கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Crime News TodayRoad accident near CuddaloreTamil News Today
Previous Post

போப் பிரான்சிஸ் காலமானார்

Next Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை வழக்கில் நாளை தீர்ப்பு

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved