கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 355 பயனாளிகளுக்கு ரூ.9,47,200 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 27 பயனாளிகளுக்கு ரூ.32,400 மதிப்பீட்டில் ஓய்வூதியத் தொகையும், 56 பயனாளிகளுக்கு பதிவு அட்டைகளும், 32 பயனாளிகளுக்கு புதுப்பித்தலுக்கான அட்டைகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களும், 17 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் என மொத்தம் 498 பயனாளிகளுக்கு ரூ.10,99,600 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், பண்ருட்டி வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, பள்ளி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர் கலந்து கொண்டனர்.



