திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை, தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார்.
துணை சபாநாயகர் பேசியதாவது:-
இந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இதுவரை திருவண்ணாமலையில் எட்டு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த எட்டு இடங்களிலும் 14, 465 புதிய பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். முகாமில் 9216 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 1207 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது ,
5598 நபர்களுக்கு இசிஜி பரிசோதனை, 991 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள், 968 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, முகாமில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என 4751 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு துணை சபாநாயகர் பேசினார். முகாமில் மாவட்ட சுகாதார த்துறை அலுவலர் வெ. பிரகாஷ்,மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் இராம் பிரதீபன், திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



