திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள பிக்கப் அணைக்கு மணிகண்டன் (வயது 20) என்ற இளைஞர் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், அவரது தந்தையும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.
இதையடுத்து, நேற்று காலை பிக்கப் அணையில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் என அடையாளம் காணப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஆகாஷ் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



