Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் கட்டி முடிக்க வேண்டும்

பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

admin by admin
28/10/2025
in செய்திகள், தமிழ்நாடு
0
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் கட்டி முடிக்க வேண்டும்
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் அமைக்கும் பணியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

முட்டுக்காடு பகுதியில் உருவாகி வரும் “கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம்” கட்டும் பணியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார்.

இத்திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்த திட்ட மதிப்பு ரூ.525 கோடியில் நிலம் ஒதுக்கீடு 37.99 ஏக்கரில் அடித்தளம், முதல் தளம் என 2.08 லட்ச சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 91,924 சதுர அடியில் கண்காட்சி அரங்கம், 50,633 சதுர அடியில் பன்னோக்கு அரங்கம், 64,960 சதுர அடியில் கலையரங்கம் அமைகிறது.

இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் கடந்த மே 29ம் தேதி தொடங்கியது. இந்த பணிகள் 18 மாதங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 10,000 நபர்கள் அமரும் வகையில் கண்காட்சி அரங்கம், 5000 நபர்கள் அமரும் வகையில் பன்னோக்கு அரங்கம், 1500 நபர்கள் அமரும் வகையில் கலையரங்கம், உணவு கூடம், பத்திரிக்கையாளர் அறை, அலுவலக அறைகள், 1638 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1700 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளது.

AlsoRead

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

மேலும், இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி, டிடிசிபி அனுமதி, கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி, தீயணைப்புத் துறை அனுமதி உள்ளிட்ட அனுமதிகள் பெறப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இத்திட்டம் நிறைவடைந்தவுடன், உலகத் தரத்திலான கண்காட்சி மற்றும் பன்னோக்கு அரங்கங்கள் தமிழகத்தின் சர்வதேச அடையாளமாக மாறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன், பொதுப்பணி துறைதலைமைப்பொறியாளர் மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுகலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம்
Previous Post

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு திராவிடம்தான் காரணம்

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

Related Posts

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

23/07/2026

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’
  • செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved