காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார்.
நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதை அருகில் இருந்து நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் கடையின் அருகே வந்து சுற்று முற்றும் பார்த்து பொருள் ஏதாவது உள்ளதா என தேடி பின்னர் கடையின் ஷட்டரை திறக்க முயன்றுள்ளார்.
கடையில் ஷட்டர் குறைந்த அளவே திறந்ததால் உள்ளே நுழைய முடியாமல் அந்த வாலிபர் திரும்பிச்சென்றுள்ளார்.
பின்னர் அந்தக் கடையின் உரிமையாளர் விஜயகுமார் கடைக்கு திரும்பி வந்த நிலையில் ஷட்டர் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு சுற்றிலும் பார்த்த போது யாரும் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் கடையின் வெளியே உள்ள சி.சி.டிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையை திறக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து அவர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.’



