வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது.
இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை செய்ததில் அது ஏழுவயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது.
இதுபற்றி பேரணாம்பட்டு வனச்சரக அலுவலர் ரகுபதி அளித்ததகவலின்பேரில்மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
சமூக ஆர்வலர்கள் யானை இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாகவும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் காப்புக்காட்டில் மர்ம நபர்கள் அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.



