திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகினற 03.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டுமாவட்ட நிர்வாகத்தின் சார்பாகபல்வேறுமுன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. பல்வேறு போக்குவரத்துக்கழக பொது மேலாளர்கள் பங்கேற்றனர். கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று மாநகருக்கு வெளியில் மார்க்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூர்பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 4764 பேருந்துகள், 11293 நடைகள் இயக்க யக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக 70 மிணி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தீபத்திருவிழாவுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும். தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப் பாதை மற்றும் திருக்கோயில் குறித்த விவரங்களை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கைமேற்கொள்ளவும், குறிப்பாக ஆந்திரா. கர்நாடகம், தெலுங்கானா ஆகிய வெளிமாநில பேருந்துகளுக்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் குறித்தும் அப்பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயில் குறித்து முறையான வழிகாட்டி பதாகைகள் அமைக்கவும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.சுதாகர், மாவட்ட வரு வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் குணசேகரன், போத்து மனது போக்குவரத்து மேலாளர் ஸ்ரீதரன், இசருவள்ளூர், கடலூர், சேலம், விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



