திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்தமாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
தற்பொழுது முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், ஏற்கனவே 611 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, 34,319 மாணவர்கள் பயனடைந்து வந்தனர். மூன்றாம் கட்டமாக தொடங்கி வைத்து, 36 நகர்புற, ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலும், 8,299 மாணவர்களுக்கு கூடுதலாக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 647 பள்ளிகளில் மொத்தம் 42,618 மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.
நகர்ப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த பூஜா பள்ளிமாணவியின் பெற்றோர் தெரிவித்ததாவது. என் பெயர் அரசு, நாங்கள் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்துவருகிறோம். என் மகள் மேரி இம்மாகுலேட் பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். நான் கூலிவேலை செய்து வருவதால் நாள்தோறும் வேலைகிடைப்பதும் இல்லை. இதனால் வீட்டில் உள்ளதை கொண்டு சமைத்து சாப்பிடுவோம்.
இதனால் என் மகளுக்கு காலை உணவு எதிர்பார்த்த அளவிற்கு செய்து கொடுக்க என் மகளும் எனக்கு இந்த உணவு முடியாத சூழ்நிலை உள்ளது. வேண்டும் இதைசெய்து தாருங்கள் என்று கூறுவாள் அப்பொழுது மனதிற்கு சங்கடமாக இருக்கும். முறையான உணவு இல்லாததால் என் மகளும் சரிவர படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதளை சரிசெய்ய என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தோம்.
இச்சமயத்தில்தான், தமிழ்நாடு முதலமைச்சர், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இதனால் என் மகள் கல்வி பயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகையான உணவு வழங்குவதுடன், ஊட்டச்சத்துமிக்க உணவாக வழங்குவதால் என் மகள் நன்றாக உணவு சாப்பிடுவதுடன், தற்பொழுது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், படிப்பில் மிகுந்த ஆர்வமும் காட்டிவருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்புத் திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நகர்ப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த சாய் அஸ்வின் பள்ளி மாணவரின் பெற்றோர் தெரிவித்ததாவது. என் பெயர் கல்பனா நாங்கள் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட திருநீலகண்ட தெரு பகுதியில் வசித்துவருகிறோம். என் மகன் அரசு பூங்கா நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறாள். நானும், என் கணவரும் கூலி வேலைக்கு சென்றால்தான் அன்றைய தினத்தினை நடத்த முடியும் என்ற நிலையில் உள்ளதால், நாள்தோறும் கூலி வேலைக்கு காலை 7 மணிக்கே சென்று விடுவோம் இதனால் முந்தைய தினம் சமைத்த உணவினை எனது மகனை சாப்பிட்டுச்செல்லுமாறு சென்று விடுவோம்.
ஆனால் என் மகன் பழைய உணவு என்பதால் சரிவர சாப்பிடாமல் பள்ளிக்சென்று விடுவான் இதனால் அவனது உடல் பாதிப்படைந்ததோடு, படிப்பிலும் முற்றிலும் கவனம் செலுத்தாமல் இருந்தான். எங்கள் மகனை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது ஆனால் காலை உணவு எங்கள் கனவினை தகர்த்துவிடுமோ என்ற பயந்த நிலையில்தான். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
இதனால் என் மகன் கல்வி பயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகையான உணவு வழங்குவதுடன், ஊட்டச்சத்துமிக்க உணவாக வழங்குவதால் என் மகன் நன்றாக உணவு சாப்பிடுவதுடன், ஆரோக்கியத்துடன் படிப்பில் மிகுந்த ஆர்வமும் காட்டிவருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்புத் திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



