Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

admin by admin
12/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்தமாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தற்பொழுது முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், ஏற்கனவே 611 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, 34,319 மாணவர்கள் பயனடைந்து வந்தனர். மூன்றாம் கட்டமாக தொடங்கி வைத்து, 36 நகர்புற, ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலும், 8,299 மாணவர்களுக்கு கூடுதலாக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 647 பள்ளிகளில் மொத்தம் 42,618 மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.

நகர்ப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த பூஜா பள்ளிமாணவியின் பெற்றோர் தெரிவித்ததாவது. என் பெயர் அரசு, நாங்கள் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்துவருகிறோம். என் மகள் மேரி இம்மாகுலேட் பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். நான் கூலிவேலை செய்து வருவதால் நாள்தோறும் வேலைகிடைப்பதும் இல்லை. இதனால் வீட்டில் உள்ளதை கொண்டு சமைத்து சாப்பிடுவோம்.

இதனால் என் மகளுக்கு காலை உணவு எதிர்பார்த்த அளவிற்கு செய்து கொடுக்க என் மகளும் எனக்கு இந்த உணவு முடியாத சூழ்நிலை உள்ளது. வேண்டும் இதைசெய்து தாருங்கள் என்று கூறுவாள் அப்பொழுது மனதிற்கு சங்கடமாக இருக்கும். முறையான உணவு இல்லாததால் என் மகளும் சரிவர படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதளை சரிசெய்ய என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தோம்.

AlsoRead

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

இச்சமயத்தில்தான், தமிழ்நாடு முதலமைச்சர், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இதனால் என் மகள் கல்வி பயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகையான உணவு வழங்குவதுடன், ஊட்டச்சத்துமிக்க உணவாக வழங்குவதால் என் மகள் நன்றாக உணவு சாப்பிடுவதுடன், தற்பொழுது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், படிப்பில் மிகுந்த ஆர்வமும் காட்டிவருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்புத் திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நகர்ப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த சாய் அஸ்வின் பள்ளி மாணவரின் பெற்றோர் தெரிவித்ததாவது. என் பெயர் கல்பனா நாங்கள் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட திருநீலகண்ட தெரு பகுதியில் வசித்துவருகிறோம். என் மகன் அரசு பூங்கா நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறாள். நானும், என் கணவரும் கூலி வேலைக்கு சென்றால்தான் அன்றைய தினத்தினை நடத்த முடியும் என்ற நிலையில் உள்ளதால், நாள்தோறும் கூலி வேலைக்கு காலை 7 மணிக்கே சென்று விடுவோம் இதனால் முந்தைய தினம் சமைத்த உணவினை எனது மகனை சாப்பிட்டுச்செல்லுமாறு சென்று விடுவோம்.

ஆனால் என் மகன் பழைய உணவு என்பதால் சரிவர சாப்பிடாமல் பள்ளிக்சென்று விடுவான் இதனால் அவனது உடல் பாதிப்படைந்ததோடு, படிப்பிலும் முற்றிலும் கவனம் செலுத்தாமல் இருந்தான். எங்கள் மகனை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது ஆனால் காலை உணவு எங்கள் கனவினை தகர்த்துவிடுமோ என்ற பயந்த நிலையில்தான். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.

இதனால் என் மகன் கல்வி பயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகையான உணவு வழங்குவதுடன், ஊட்டச்சத்துமிக்க உணவாக வழங்குவதால் என் மகன் நன்றாக உணவு சாப்பிடுவதுடன், ஆரோக்கியத்துடன் படிப்பில் மிகுந்த ஆர்வமும் காட்டிவருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்புத் திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: காலை உணவுத் திட்டம்திருப்பத்தூர் மாவட்டம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Next Post

ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி புனரமைப்பு பணிகள்

Related Posts

Power Cut

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026
LPG Price Hike

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved