செய்யார் அடுத்த தூசி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட 20 நாட்கள் கழித்து மூன்று கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது தூசி காவல் நிலைய எல்லையான அப்துல்லாபுரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இறந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கபாலி (25) என, தெரிய வந்தது. கொலையாளிகளை தேடும் பணியில் தூசி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
20 நாட்கள் ஆன பிறகு தாள் நேற்று கொலையாளிகள் தூசி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (20), பாபு (20), யுவராஜ் (20), என, தெரிய வந்தது.
போலீசார் இவர்களை அதிகாலையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மூவரும் அப்துல்லாபுரம் கிராம எல்லையான டாஸ்மார்க் கடை அருகே அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுபாலி அங்கு குடிபோதையில், பாலாஜி மற்றும் மூவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரத்தில் மேற்கண்ட மூவரும் ஒன்று சேர்ந்து கபாலியை அடித்தும் – கத்தியால் வெட்டியும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து தூசி போலீசார் மேற்கண்ட மூவர் மீதும் வழக்குப் பதிந்து செய்யாறு முதலாவது நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



