கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மே. மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் உயர் மட்ட மேம்பாலம் இல்லாததால் மணிமுத்தாற்றை கடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள், கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வாங்குவதற்கு நகரத்திற்கு சென்று வருகிறார்கள் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒட்டு மொத்தமாக பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் மணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தற்போது வரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை என குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் பள்ளி செல்லக்கூடிய மாணவர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து நல்லூர், வேப்பூர், விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களுக்கு பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
எனவே உடனடியாக மேம்பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



