கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவின் படுவனூரு கிராமத்தின் சஜன்காடியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஒரு மினி லாரியை சோதனை செய்த போது அதில் கஞ்சா கடத்தியிருப்பது தெரியவந்தது.
காரின் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் தன்னை பெல்தங்கடி சார்மாடி கிராமத்தைச் சேர்ந்த ரபீக் (37) எனதெரிய வந்தது அவரது, காரை ஆய்வு செய்தபோது, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுமார் 100 கிராம் எடையுள்ள
கஞ்சா செடியின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகள் அடங்கிய ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு, சரக்கு வாகனத்தின் ஓட்டுநரிடம் விசாரித்தனர், அவர் தன்னை பெல்தங்கடி சார்மாடி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சாதிக் (37) என்று அடையாளம் காட்டினார்.
அவரது வாகனத்தை சோதனை செய்தபோது. வாகனத்தில் மொத்தம் 106 கிலோ 60 கிராம் எடையுள்ள 73 கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 53,03,000/- ஆகும். இது குறித்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, கேரளா, மங்களூர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கஞ்சா இலைகளை எடுத்துச் செல்வதாகக் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவ சாட்டப்பட்டவர்களிடம் இருந்த கஞ்சா. போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



