திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கன்றுகள் பங்கேற்றன.
விழாவை காண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் குவிந்தனர். குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களிடம் முதல் பரிசு ஸ்கூட்டி இருசக்கர வாகனமும் 9999 பணமும், இரண்டாவது பரிசு ஸ்கூட்டி இருசக்கர வாகனமும் ரூ.7777 தொகையும், மூன்றாவது பரிசு ஸ்கூட்டி, ரூ. 4444 உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதி கடலாடி என்.எஸ் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளையராஜா, விவசாய அணி நீலகண்டன், வனக்குழு தலைவர் வெங்கடேசன், ராமலிங்கம், முருகன், ஓட்டுநர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணியழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



