தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 15 அறைகள் மற்றும் 60படுக்கையுடன்மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர்களுக்கான புதிய தோழி மகளிர் விடுதி கட்டிடத்தை காணொலிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தோழி மகளிர் விடுதி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
தோழி என்ற சொல் நண்பகத்துவத்தையும் ஆதரவையும் குறிக்கிறது. அந்த உணர்வுடன் வேலைவாய்ப்பு மற்றும் நல்லவாய்ப்புகளைத் தேடிவரும் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான நம்பகத்துவத்தையும் மற்றும் குறைந்த செலவில் தங்கும் வசதியையும் வழங்கும் நோக்கில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பான முயற்சியின் அடிக்கல் 21.5.2025 அன்று நாட்டப்பட்டது பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கி அவர்களை முன்னேற்றுவதுதான் தோழி விடுதியின் நோக்கமாகும். இந்த விடுதியில் மொத்தம் 15 அறைகள் மற்றும் 60 படுக்கைகள் உள்ளன. வசதியான மற்றும் சுத்தமான தங்குமிடமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கும் பெண்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கை தேவைகளை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு பகுதி. படிப்பறை, மற்றும் கிரேச்அறை ஆகியவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விடுதியில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24×7 பாதுகாப்பு வசதி, வை-பை வசதி, சிசிடிவி . வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு பகல்நேர குழந்தைகள். பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம் இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு வசதியான தங்குமிடங்கள் அறை போன்ற வசதிகள்.
குறைந்த வாடகையில் வழங்கப்படவுள்ளன. மகளிரின் பாதுகாப்பான. தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்திகொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம், ஒரு சாதாரண விடுதி மட்டுமல்லாமல், பெண்கள் மரியாதையுடன் தன்னம்பிக்கையுடன் மற்றும் மனநிம்மதியுடன் வாழக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பாலசரஸ்வதி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் உதவி செயற்பொறியாளர் அரவிந்தன், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும்நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



