Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/10/2024
in மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு  செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (18.10.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (18.10.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி, “திருவண்ணாமலை மாநகரில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1 முதல் 17 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 10 ஆம் தேதி அன்று, திருத்தேர் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா, வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைக்கு மட்டும் சுமார் 40 லிருந்து 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் கூடுகின்ற இடங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கள ஆய்வு செய்தோம். அதைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினோம்.

கழக அரசு அமைந்தது முதல் திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பக்தர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகமல் இருக்க, குடிநீர் வசதி நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. மேலும், மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதற்காக முதலுதவி மையங்கள் (FIRST AID CENTRES) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடமாடும் கழிப்பறை வசதிகள் (MOBLIE TOILET) உட்பட 400-க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அதுபோல கிரிவலப்பாதையில் பலர் அன்னதானம் வழங்குவார்கள். எனவே, உணவு பாதுகாப்புத்துறை மூலம் உணவின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மின் விளக்கு வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், போக்குவரத்துத்துறையின் சார்பில் பேருந்து சேவை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 37 கோடி ரூபாய் மதிப்பில், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கான மாஸ்டர் பிளானை அறிவித்துள்ளார்கள். நிறைய திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், வளைவுகள், அன்னதானக் கூடங்கள் சமூக நலக்கூடங்கள் கோயில், குளத்தை தூர்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சில பணிகள் தொடங்கிவிட்டன. வரும் 6 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பில் கோபுரங்கள் மற்றும் கோவில் விமானங்களில் நிரந்தர மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சூழலில்தான் இன்றைக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்திருக்கிறோம்.

சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பாக ஒரு குழுவை இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பி, பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் திருவண்ணாமலையில் தீபத்திருநாளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
அந்த கருத்துக்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது பல ஆலோசனைகள் மேற்கொண்டோம். இந்தக்கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட அமைச்சராக இருக்கக்கூடிய அண்ணன் எ.வ.வேலு அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களும், தீபத்திருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.
கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்துள்ளது.

குடிநீருக்காக ஏற்கனவே 8 ஆர்.ஓ பிளாண்ட்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது புதிதாக 6 ஆர்.ஓ பிளாண்டுகள் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை செயல்பாட்டிற்கு வரும் ” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: arunai tamilarunai tamil paperarunai thamizharunaitamizhbreaking newstiruvannamalaitiruvannamalai breaking newstiruvannamalai newsஅமைச்சர் எ.வ.வேலுஉதயநிதி ஸ்டாலின்திருகார்த்திகை தீபத் திருவிழாதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்திருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வட்டார கல்வி அலுவலகம் கட்ட கோரிக்கை

Next Post

தமிழக மகளிர் உரிமை தொகை இனி இவங்களுக்கும் வழங்கப்படும்

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved