சென்னையில் நேற்று காலை(ஜன.24)தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மேலும்ரூ.1040உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,600 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வரலாறு அளவுக்கு மிக காணாக அளவுவருகிறது. சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ரூ. 3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 500 குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 1,16,960 -க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 14,620-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் பிற்பகல் மேலும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000-க்கும், கிராம் ரூ.14,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி காலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 355-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 3,55,000 -க்கும் விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் கிராமும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதே முதலீட்டாளர்களும், பல நாடுகள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருவதே காரணம் என கூறப்படுகிறது.



