Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
26/03/2025
in இந்தியா
0
நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

”பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பாட்டிலிங் நிலையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் பயன்பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள், இந்த பணியை செய்கின்றனர்.

நடப்பாண்டு முதல் 2030ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதில் இருக்கும் ஒரு சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களது ஆட்சேபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் டேங்கர் லாரிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல்லில் டேங்கர் லாரி சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:

AlsoRead

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

2025 – 2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

மார்ச் 24 ம் தேதி தகவல் கூறப்படும் என கூறிய எண்ணெய் நிறுவனங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர்கள் வெளியிட்டது பாதகமான அறிவிப்பு மட்டுமே. நாங்கள் நஷ்டத்திற்காக லாரி இயக்க முடியாது. 10 இடங்களில் கேஸ் ஏற்றும் இடங்கள் உள்ளன. நாளை முதல் அந்த இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும்.

நாளை முதல் காலமுறை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்படும். 4 ஆயிரம் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயங்காது. இந்தியா முழுவதும் பாதிப்புத் தான். மற்ற மண்டலத்திலும் பேசி வருகின்றோம். அவர்களும் போராடத் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

டேங்கர் லாரிகள் போராட்டம் நடக்கும் பட்சத்தில் சிலிண்டர் பாட்டிலிங் நிலையங்களுக்கு கேஸ் கொண்டு செல்வது பாதிக்கும்; இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: Gas tanker strikeLorry StrikeLPGTamil News Today
Previous Post

ஜெமினியின் கை பற்றி கலங்கிய கமல்

Next Post

‘நான் ஆளுநரை புகழ்ந்தேனா..? உள்குத்தை கவனிங்க’ : இயக்குனர் பார்த்திபன்

Related Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026
மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

16/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved