வேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக் விரைவு ரயில் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 3.45 மணிக்கு அசோகாபுரம் விரைவு ரயில் ஆக காட்பாடியில் இருந்து புறப்படும்என்றுதெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று 11.30 மணிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடிரயில் நிலையத்திற்கு வந்து மீண்டும் மாலை 4:20 க்கு புறப்படும் என்றும்,12 மணிக்கு வரும் அசோகபுரம் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கவைக்கப்பட்டு மீண்டும் 5.30 மணிக்கு லால்பாக் விரைவு ரயிலாக செல்லும் என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரயிலில் வரும் பயணிகள் காட்பாடிரயில் நிலையத்திற்கு வந்து கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக கடந்த வாரமே ரயில்வே துறை சார்பில் அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில் “எங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது. நாங்கள் சென்னைக்கு செல்வதற்காக இந்த ரயில்களில் வந்திருக்கின்றோம்.
ஆனால் இப்படி காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தி விடுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த பகுதியில் நிற்கின்றோம். அதேபோன்று இந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் வேலூர் புதிய பேருந்து நிலையம் சென்று பேருந்தில் சென்னைக்கு செல்ல முடியும்.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்து வசதிகளும் ரயில்வே துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றனர்.



