கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இலவச மனைப் பட்டா கொடுக்கப்பட்ட இடம் என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதை அறிந்ததும் ஏற்கனவே இலவச மனைப் பட்டா பெற்ற மக்கள் அப்பகுதியில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் திடீரென சிறு சிறு வீடுகள் கட்டத் தொடங்கினார்கள்,
அப்போது புதிதாக பட்டா பெற்றவர்களுடன் இடத்தை அளவீடு செய்யச் சென்ற மக்களிடம் ஏற்கனவே பட்டா பெற்றவர்கள் இது எங்களுக்காக வழங்கப்பட்ட இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்ய முடியாமல் திரும்பியதுடன், புதிதாக பட்டா பெற்றவர்களிடம் இது உங்களுக்காக வழங்கப்பட்ட இடம்தான். அளவீடு செய்து உங்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறிவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், புதிதாகபட்டா பெற்றவர்கள் தங்களுக்கான இடத்தை விருத்தாசலம் வருவாய் துறையிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் காட்டுங்கள் என கூறி பட்டா பெற்ற பெற்ற மக்கள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுக்கு வழங்கப்பட்டபட்டாஇங்கே இருக்கிறது. எங்களுக்கான இடம் எங்கேஎன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த துணை வட்டாட்சியர் வேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தாசில்தார் வந்தவுடன் அவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால் நாங்கள் பலமுறை தாசில்தாரை சந்திக்க வந்தோம். தாசில்தாரை பார்க்க முடியவில்லை. தாலுகா அலுவலகம் தாசில்தார் இடத்தை அளவீடு செய்து ஒப்படைத்தால் தான் இங்கிருந்து செல்வோம் எனக் கூறி விட்டு விருத்தாசலம் சுடலூர் சாலையில் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.



