தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆவடி சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிருஷ்ணசாமி, மாதவரம் எஸ்.சுதர்சனம், வி.ஜி. இராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், க.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



