Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கஞ்சா விற்பனை 4 பேர் கைது
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு, ஆலை அருகிலேயே குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

இங்கு, ஜன.9ம் தேதி இரவு புகுந்த கொள்ளையர்கள்,  வீடுகளில் ஆட்கள் இல்லாத, வெளியூர் சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து, பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதில் கார்த்திகேயன், வேல்முருகன், கருப்பையா, தாமரைக்கண்ணன், பழனிச்சாமி, கவியரசன் ஆகிய 6 பேரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த 77 பவுன் நகை, முக்கால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.30 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதே  சிமெண்ட் ஆலை குடியிருப்பில் கடந்த ஆண்டு, 170 பவுன் நகை திருடுபோனநிலையில், தற்போதும் 6 வீடுகளில் 77 பவுன் நகை திருடு போனது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், வேடசந்தூர் டி.எஸ்.பி., பவித்ரா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் குஜிலியம்பாறை  முருகன், வேடசந்தூர் வேலாயுதம், வடமதுரை  கண்ணன் தலைமையில்  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக அங்கிருந்த சி.சி.டிவி., கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், குஜிலியம்பாறை எஸ்.ஐ., கணேசன்  தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படை பிரிவினர், மத்திய பிரதேசம் விரைந்தனர்.

அங்கு நடத்திய தேர்தல் வேட்டையில்,  முக்கிய குற்றவாளியான மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சேர்ந்த திலீப் மகன் கலாம் 24 என்பவரை தேடி சென்றனர். தீவிர விசாரணையில்,

 அவர் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஓசூர் வந்த போலீசார், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த கலாம் என்பவரை கைது செய்தனர்.  குஜிலியம்பாறை ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்த போது, உண்மையை ஒத்துக் கொண்ட அவரிடம் இருந்து, 12 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சியவர்கள் குறித்து விசாரித்து வந்த நிலையில்,  திடீரென கலாம் தப்பியோட முயன்றதை தொடர்ந்து, அவரது இடது காலில் அடிபட்டு கீழே விழுந்தார்.

அவரை மீட்ட போலீசார் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வழக்கு குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி., பவித்ரா கூடுதல் கவனம் செலுத்தி விசாரித்து வருகிறார்.

Tags: Crime News TodayDindigul Newstamil news
Previous Post

மணிப்பூர் முதலமைச்சர் திடீர் ராஜினாமா

Next Post

ஒன்றிய அரசின் அனைத்து பதவிகளிலும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்: திருச்சி சிவா

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved